ADDED : ஜூன் 07, 2024 12:38 AM
திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர், ஏ.வி.பி., லே அவுட் குடியிருப்போர் நலச் சங்கத்தின், வாசகர் சிந்தனை பேரவையின், 18வது கூட்டம், சங்க அரங்கில் நடந்தது.
தலைவர் துரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் பிரபு, பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் நுால்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. குறும்பட இயக்குனர் முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக செயலாளர் வெள்ளியங்கிரி வரவேற்றார். வாசகர் சிந்தனை பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். தங்க பூபதி நன்றி கூறினார்.