Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரேஷன் கடை திறப்பு; கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

ரேஷன் கடை திறப்பு; கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

ரேஷன் கடை திறப்பு; கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

ரேஷன் கடை திறப்பு; கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

ADDED : ஜூன் 11, 2024 12:08 AM


Google News
உடுமலை:''ரேஷன் கடைகளை வேலைநேரம் முழுவதும் செயல்படுத்தாத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன; 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள், அரிசி, பருப்பு உள்பட உணவுப்பொருட்கள் பெற்றுவருகின்றனர். சில ரேஷன்கடைகள் காலதாமதமாக திறக்கப்படுவதாகவும், முழுமையாக செயல்படுவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்துக்கும், முதல்வரின் முகவரிக்கும் தொடர்ந்து புகார் அளித்துவருகின்றனர்.

சமூக ஆர்வலரின் புகார் மனுவுக்கு, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) பழனிச்சாமி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை வாயிலாக, நடத்தப்படும் அனைத்து ரேஷன்கடைகளையும் உரிய நேரத்தில் திறந்து, வேலை நேரம் முழுவதும் செயல்படுத்தவேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது; உரிய நேரத்தில் ரேஷன் கடைகளை திறக்காத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது வினியோக திட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கும்வகையில் செயல்படும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us