Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 24ல் தபால் குறைகேட்பு கூட்டம்

24ல் தபால் குறைகேட்பு கூட்டம்

24ல் தபால் குறைகேட்பு கூட்டம்

24ல் தபால் குறைகேட்பு கூட்டம்

ADDED : மார் 11, 2025 09:54 PM


Google News
- நமது நிருபர் -

திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும், 24ம் தேதி தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியிருப்பதாவது:

தபால் துறை வழங்கும் சேவைகளை பற்றி விவாதிக்க, குறைகள் இருந்தால் தெரிவிக்க, திருப்பூர் தலைமை தபால் நிலையம், கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும், 24ம் தேதி, மாலை 4:00 மணிக்கு தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

தபால் துறை சார்ந்த யோசனை, புகார்கள் இருப்பின், வரும், 14ம் தேதிக்குள், 'பட்டாபிராமன், தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் 641601' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us