Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆக்கிரமிப்புகளால் தவிக்கும் பயணியர்

ஆக்கிரமிப்புகளால் தவிக்கும் பயணியர்

ஆக்கிரமிப்புகளால் தவிக்கும் பயணியர்

ஆக்கிரமிப்புகளால் தவிக்கும் பயணியர்

ADDED : மார் 11, 2025 09:55 PM


Google News
உடுமலை, ;உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணியர் நிற்குமிடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெளியூர், டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு நகரங்களுக்கு செல்ல வருகின்றனர்.

இதனால், பஸ் ஸ்டாண்டில் எப்போதும் மக்கள் அதிக அளவில் வந்து செல்வர். ஆனால் அவர்கள் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லை. மேலும் திருப்பூர் பஸ்கள் நிற்குமிடத்தில் பயணியர் காத்திருப்பதற்கான இடம் உள்ளது. இங்கு சிறிய தற்காலிக கடைகள் போடப்படுகின்றன.

அங்குள்ள கடைகளும் அந்த இடத்தை ஆக்கிரமிக்கின்றன. இதனால், பயணியர் அந்த இடத்தில் அமர முடியாமல், பஸ்சுக்காக நீண்ட நேரம் நின்று கொண்டு அவதிப்பட வேண்டியதுள்ளது. குறிப்பாக, பெண்களும், முதியவர்கள், குழந்தைகளும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பயணியருக்கு இடையூறாக போடப்படும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள், பயணியர் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us