ADDED : ஜூலை 17, 2024 11:58 PM
திருப்பூர் மாவட்டம்.ஊத்துக்குளி தாலுகாவில், வரும் 19ம் தேதி, உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம் நடக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாதத்தில் ஒருநாள், கலெக்டர்கள் ஒரு வருவாய் கிராமத்தில் முகாமிட்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, நலத்திட்ட உதவி சென்றடைவதை உறுதி செய்கின்றனர். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டம், ஊத்துக்குளி தாலுகாவில், வரும், 19ம் தேதி நடக்கிறது. பொதுமக்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்து, கோரிக்கையை தெரிவித்து தீர்வு காணலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.