ADDED : ஜூன் 28, 2024 11:59 PM
உடுமலை:உடுமலையில் நடக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மதுரை என்.எம்.எஸ்., அறக்கட்டளையின் சார்பில், காமராஜர் பேச்சுப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இதன்படி, 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மூன்று பிரிவுகளாக, பள்ளி மாணவர்களுக்கான திருப்பூர் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நாளை (30ம் தேதி) நடக்கிறது.
உடுமலை-- தாராபுரம் ரோடு துங்காவியில் உள்ள அனுகிரக இன்டர்நேஷனல் பள்ளியில் நடக்கிறது.
மாவட்ட அளவில், முதல் ஆறு இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.
விருப்பமுள்ள மாணவர்கள் கண்ணபிரான் -- 8778201926 மற்றும் சவுந்திரபாண்டியன் - 7373736199 என்ற எண்களை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.