Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாடுகளுக்கு மடிவீக்க நோய் அபாயம்

மாடுகளுக்கு மடிவீக்க நோய் அபாயம்

மாடுகளுக்கு மடிவீக்க நோய் அபாயம்

மாடுகளுக்கு மடிவீக்க நோய் அபாயம்

ADDED : ஜூலை 17, 2024 11:56 PM


Google News
திருப்பூர் : 'மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோய் ஏற்படும்' என, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், இந்திய வானிலைத்துறையின் கோவை, வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூருக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

அதன்படி, வரும், 21ம் தேதி வரை, திருப்பூரில், பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம், 32 முதல், 33 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 21 முதல், 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக, மணிக்கு, 28 முதல், 32 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்; பெரும்பாலும் தென் மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும். வரும் நாட்களில் மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு.

விவசாய நிலங்களில் நீர்பாசனம் மற்றும் மருந்து தெளிப்பை நிறுத்தி வைக்க வேண்டும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளதால், காற்றின் வேகத்தை குறைக்க, கோழிக்கூடாரங்களை சுற்றிலும், சாக்குப்பைகளை தொங்கவிட வேண்டும்.

கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், பால் கறப்பதற்கு முன், பின், மாடுகளின் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் உதவியுடன் கழுவி, மடிவீக்க நோய் வராமல் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us