ADDED : ஜூலை 05, 2024 12:42 AM
திருப்பூர்;திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் திட்ட பணிகள் குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கணக்கம்பாளையத்தில், பெருமாநல்லுார் - கூலிபாளையம் ரோட்டிலிருந்து மீனாட்சி நகர், 2வது வீதி வரை நடைபெறும் சாலை மேம்பாட்டு பணி. ஆண்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் சமுதாய கூடம் கட்டுமான பணி. முதலிபாளையம் ஊராட்சி, கெங்கநாயக்கன்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி உள்பட மொத்தம், 1.28 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை, கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.