/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/மாணவி சாவில் டாக்டர்கள் சந்தேகம் : உடற்கூறாய்வுக்கு அனுப்பியதால் மறியல்மாணவி சாவில் டாக்டர்கள் சந்தேகம் : உடற்கூறாய்வுக்கு அனுப்பியதால் மறியல்
மாணவி சாவில் டாக்டர்கள் சந்தேகம் : உடற்கூறாய்வுக்கு அனுப்பியதால் மறியல்
மாணவி சாவில் டாக்டர்கள் சந்தேகம் : உடற்கூறாய்வுக்கு அனுப்பியதால் மறியல்
மாணவி சாவில் டாக்டர்கள் சந்தேகம் : உடற்கூறாய்வுக்கு அனுப்பியதால் மறியல்
ADDED : ஜன 25, 2024 01:02 PM
ஆம்பூர் : ஆம்பூர் அருகே, பாம்பு கடித்ததாக, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற மாணவி பலியானார்.
சாவில் சந்தேகமடைந்த டாக்டர்கள், உடற்கூறு ஆய்விற்கு பரிந்துரைத்ததால், ஆத்திரத்தில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பள்ளி தெரு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முரளி, 45; இவரது மகள் அனு, 13, உமாராபாத் அரசு நடுநிலைப்பள்ளியில், 8 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர்களுடன் வீட்டில் துாங்கியபோது, பாம்பு கடித்தது போல் உள்ளது என வலியால் அலறி துடித்தார். உடனடியாக, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவியின் உடலில் பாம்பு கடித்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லாததால் சந்தேகமடைந்த டாக்டர்கள், மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய, வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், நேற்று காலை, உமாராபாத் - ஆம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஆம்பூர் டி.எஸ்.பி., சரவணன் மற்றும் உமாராபாத் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மறியலை கைவிட செய்து, விசாரித்து வருகின்றனர்.