/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொப்பூரில் குப்பைக்கு தீ பள்ளி மாணவர்கள் அவதி கொப்பூரில் குப்பைக்கு தீ பள்ளி மாணவர்கள் அவதி
கொப்பூரில் குப்பைக்கு தீ பள்ளி மாணவர்கள் அவதி
கொப்பூரில் குப்பைக்கு தீ பள்ளி மாணவர்கள் அவதி
கொப்பூரில் குப்பைக்கு தீ பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : செப் 12, 2025 02:34 AM

கொப்பூர்:கொப்பூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, நெடுஞ்சாலையோரம் தொட்டியுடன் குப்பை எரிக்கப்படுகிறது. இதனால், ஏற்படும் புகையால், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சி, அரண்வாயல் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, இப்பகுதியில் சேகரமாகும் குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றாமல், தொட்டியுடன் தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதனால் ஏற்படும் புகையால், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊராட்சி பகுதியில் குப்பை எரிப்பதை தடுத்து, முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.