/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விபத்தில் சிக்கிய வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு விபத்தில் சிக்கிய வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு
விபத்தில் சிக்கிய வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு
விபத்தில் சிக்கிய வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு
விபத்தில் சிக்கிய வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 08, 2024 02:11 AM

கடம்பத்துார்,'திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தொடுகாடு ஊராட்சி.
ஸ்ரீபெரும்புதுாரில் மத்திய - மாநில அரசு நிதி உதவியுடன், நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தில் 77.11 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது.
இதனால் போக்குவரத்து மண்ணுார், நெமிலி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் காட்டு கூட்டு சாலையில் மாற்றுப்பாதையில் செல்லவும் என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், விதிமீறி வரும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த எச்சரிக்கையை மீறி வெளி மாநில கனரக லாரி ஒன்று, இந்த சாலையில் வந்தபோது சிறுபாலம் கட்டும் பகுதியில் விபத்தில் சிக்கியது.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.