ADDED : ஜூலை 08, 2024 05:51 AM
திருவள்ளூர்: திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி சாமுண்டீஸ்வரி, 23. கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக தன் பெற்றோருடன் சாமுண்டீஸ்வரி வசித்து வருகிறார்.
கடந்த 30ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து இவரது தாய் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.