/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஜூன் 08, 2024 12:48 AM

திருவள்ளூர்:சென்னை - - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை. இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, இலகு, கனரக, வாகனங்கள் என தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ நீளச் சாலை 2014-ஆம் ஆண்டு , இச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப் பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018-ஆம் ஆண்டின் இறுதியில் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான 71 கி.மீ நீள சாலைவிரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 2021-ஆம் ஆண்டிற்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை சீரமைப்பு பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது.
இதில் திருமழிசை பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள நெடுஞ்சாலையில் சிறு மழைக்கே நீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் நீர் வெளியேற வழியில்லாததால் சாலையோரம் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.