Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் துவங்கியது ரோப்கார் சேவை

பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் துவங்கியது ரோப்கார் சேவை

பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் துவங்கியது ரோப்கார் சேவை

பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் துவங்கியது ரோப்கார் சேவை

ADDED : ஜூன் 08, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த மலைக்கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, மார்ச் 8 ல், 20 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் பங்களிப்புடன் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த ரோப்கார் சேவை வாயிலாக, தினசரி ஆயிரம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வரும் இந்த ரோப்கார் சேவை, 5 மற்றும் 6ம் தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் வழக்கம் போல் இயங்கியது. காலை 8:00 மணி முதல் ரோப்கார் வளாகத்தில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று காலை சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின் பக்தர்கள் ரோப்காரில் அனுமதிக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us