/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மணல் கடத்தி வந்த 3 லாரிகள் பறிமுதல் மணல் கடத்தி வந்த 3 லாரிகள் பறிமுதல்
மணல் கடத்தி வந்த 3 லாரிகள் பறிமுதல்
மணல் கடத்தி வந்த 3 லாரிகள் பறிமுதல்
மணல் கடத்தி வந்த 3 லாரிகள் பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2024 09:13 PM
திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து உரிய அனுமதியின்றி லாரிகள் மூலமாக எம்- -சான்ட், ஜல்லி, கிராவல் உள்ளிட்ட கனிம வளங்கள் திருத்தணி வழியாக கடத்தி வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரின் அறிவுறுத்தலின்படி திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப் - இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் தமிழக எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனைச் சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தை நோக்கி கனிம வளங்களை ஏற்றி வந்த 11 லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் 3 லாரிகள் உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்ததும், 8 லாரிகள் அதிகளவு பாரங்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று லாரிகளை பறிமுதல் செய்து 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.