Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 1,200 மெ.வாட் மின் உற்பத்தி வடசென்னையில் பாதிப்பு

1,200 மெ.வாட் மின் உற்பத்தி வடசென்னையில் பாதிப்பு

1,200 மெ.வாட் மின் உற்பத்தி வடசென்னையில் பாதிப்பு

1,200 மெ.வாட் மின் உற்பத்தி வடசென்னையில் பாதிப்பு

ADDED : ஜூலை 24, 2024 11:13 PM


Google News
பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில், முதலாவது நிலையில் உள்ள மூன்று அலகுகளில், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதேபோல், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில், தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என, மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இரண்டாவது நிலையில் உள்ள முதல் அலகில், ஒரு வாரத்திற்கு முன் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது அலகில், நேற்று கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளும் பழுதான நிலையில், தற்போது மொத்தமாக, 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us