/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கூடங்குளத்தில் நிலநடுக்கம் பீதி அதிகாரிகள் மறுப்பு கூடங்குளத்தில் நிலநடுக்கம் பீதி அதிகாரிகள் மறுப்பு
கூடங்குளத்தில் நிலநடுக்கம் பீதி அதிகாரிகள் மறுப்பு
கூடங்குளத்தில் நிலநடுக்கம் பீதி அதிகாரிகள் மறுப்பு
கூடங்குளத்தில் நிலநடுக்கம் பீதி அதிகாரிகள் மறுப்பு
ADDED : ஜூன் 06, 2024 01:04 AM
திருநெல்வேலி:கூடங்குளம் அணு மின் நிலையப் பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்; அதிகாரிகள் மறுத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்படுகின்றன. மேலும் நான்கு அணு உலைகள் கட்டுமான பணியில் உள்ளன.
கூடங்குளத்தில் நேற்று மாலை 6:11 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலைய வட்டாரம் மற்றும் திருநெல்வேலியில் உள்ள புவியியல் ஆய்வு மையத்தினர் நிலநடுக்கம் குறித்த தகவலை மறுத்தனர்.