ADDED : செப் 03, 2025 01:10 AM
தேனி : மயிலாடும்பாறை தாழையூத்து கிராமத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் தொழில்நுட்ப சேவை மையம் உள்ளது. துறை சார்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது. சமயநல்லுார் மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மகிமா சாந்தி தலைமை வகித்தார். தேனி பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நிஷா முன்னிலை வகித்தார்.
மல்பெரி தோட்ட பராமரிப்பு, உரங்கள் பற்றி விழிப்புணர்வு, புழு வளர்ப்பு விளக்கப்பட்டது. பயிற்சியை தொழில்நுட்ப உதவியாளர் சுஜா ருக்மணிபாய், தொழில்நுட்ப மைய அலுவலர்கள் ஒருங்கிணைத்தனர்.