Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ நண்பரை கம்பியால் தாக்கி கொலை செய்தவர் கைது

நண்பரை கம்பியால் தாக்கி கொலை செய்தவர் கைது

நண்பரை கம்பியால் தாக்கி கொலை செய்தவர் கைது

நண்பரை கம்பியால் தாக்கி கொலை செய்தவர் கைது

ADDED : ஜூன் 09, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
கூடலுார்: கூடலுார் அருகே வெட்டுக்காட்டில், நண்பரை கம்பியால் தாக்கி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கூடலுார் மேதகாரர் தெருவை சேர்ந்தவர் கலைக்கண்ணன், 47; கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் முருகன், 45; இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு, வெட்டுக்காட்டில் உள்ள கணேசன் என்பவர் தென்னந்தோப்பில் வேலை செய்ய சென்றனர். தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் தங்கினர்.

நேற்று காலை, கணேசன் தோட்டத்திற்கு சென்ற போது, கலைக்கண்ணன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில், முருகன் கம்பியால் தாக்கி, கலைக்கண்ணனை கொலை செய்தது தெரிய வந்தது. முருகனை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us