Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பியால் தாக்கி நண்பரை கொலை செய்த நண்பர் போலீசார் கைது செய்தனர்

கம்பியால் தாக்கி நண்பரை கொலை செய்த நண்பர் போலீசார் கைது செய்தனர்

கம்பியால் தாக்கி நண்பரை கொலை செய்த நண்பர் போலீசார் கைது செய்தனர்

கம்பியால் தாக்கி நண்பரை கொலை செய்த நண்பர் போலீசார் கைது செய்தனர்

ADDED : ஜூன் 09, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
கூடலுார்: தேனி மாவட்டம் கூடலுார் அருகே வெட்டுக்காட்டில் சக நண்பரை கம்பியால் தாக்கி கொலை செய்த பாசக்கார நண்பர் முருகனை 45, லோயர்கேம்ப் போலீசார் கைது செய்தனர்.

கூடலுார் மேதகாரர் தெருவைச் சேர்ந்தவர் கலைக்கண்ணன் 47. கன்னிகாளிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் 45. இருவரும் நண்பர்கள். கூடலுார் அருகே வெட்டுக்காட்டில் உள்ள கணேசன் என்பவர் தென்னந்தோப்பில் வேலை செய்ய நேற்று முன்தினம் இரவு இருவரும் சென்றனர். தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் தங்கினர்.

நேற்று காலை கணேசன் தோட்டத்திற்கு சென்ற போது கலைக்கண்ணன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

போலீசாருக்கு அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் போலீசார் சம்பவயிடம் சென்றனர். பின் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் உடன் தங்கியிருந்த முருகன் கம்பியால் தாக்கி கலைக்கண்ணனை கொலை செய்தது தெரிந்தது. முருகனை போலீசார் கைது செய்தனர். இறந்த கலைக்கண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us