/உள்ளூர் செய்திகள்/தேனி/ விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்கள் ஆர்வம் விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்கள் ஆர்வம்
விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்கள் ஆர்வம்
விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்கள் ஆர்வம்
விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்கள் ஆர்வம்
ADDED : செப் 10, 2025 02:22 AM

தேனி: தேனி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆக., 26ல் துவங்கியது.
இதுவரை பள்ளிகல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் முடிந்துள்ளன. நேற்று அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் நடந்தது. கடந்தாண்டை விட அதிக அளவிலான அரசு ஊழியர்கள் இந்தாண்டு போட்டிகளில் பங்கேற்றனர். பெண்கள், ஆண்கள் என தனித்தனி பிரிவில் தடகளம், இறகுப்பந்து, வாலிபால், கபடி, கேரம், செஸ் போட்டிகள் நடந்தன. இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. பொதுப்பிரிவில் கேரம் போட்டி நடக்கிறது.