/உள்ளூர் செய்திகள்/தேனி/ஊராட்சி தலைவர் ராஜினாமா விவகாரம் செயலர் மீண்டும் பொறுப்பேற்பு; கேரளா நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவுஊராட்சி தலைவர் ராஜினாமா விவகாரம் செயலர் மீண்டும் பொறுப்பேற்பு; கேரளா நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
ஊராட்சி தலைவர் ராஜினாமா விவகாரம் செயலர் மீண்டும் பொறுப்பேற்பு; கேரளா நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
ஊராட்சி தலைவர் ராஜினாமா விவகாரம் செயலர் மீண்டும் பொறுப்பேற்பு; கேரளா நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
ஊராட்சி தலைவர் ராஜினாமா விவகாரம் செயலர் மீண்டும் பொறுப்பேற்பு; கேரளா நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : செப் 10, 2025 02:26 AM
மூணாறு : மூணாறு ஊராட்சியில் தலைவர் ராஜினாமா செய்த விவகாரத்தில் பணிமாற்றம் செய்யப்பட்ட செயலர் கேரளா நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் செயலராக பொறுப்பேற்றார்.
மூணாறு ஊராட்சி செயலராக கொல்லத்தைச் சேர்ந்த உதயகுமார் கடந்த மே 14 வரை பொறுப்பு வகித்தார். காங்கிரஸைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் தீபா தனது தலைவர் பொறுப்பை மார்ச் 29ல் ராஜினாமா செய்த விவகாரத்தில் செயலர் உதயகுமார் விதி மீறியதாக புகார் எழுந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளாட்சி துறை தலைமை இயக்குனர், தேர்தல் கமிஷனுக்கு புகார் அளித்தனர். விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன் செயலர் உதயகுமார் விதி மீறியதாக கூறி அவரை பணியிடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி கோழிக்கோடு மாவட்டம் துனேரி ஊராட்சி செயலராக உதயகுமாரை பணியிட மாற்றம் செய்து உள்ளாட்சிதுறை தலைமை இயக்குனர் மே 14ல் உத்தரவிட்டார்.இந்த நடவடிக்கைக்கு எதிராக உதயகுமார் கேரளா நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகினார். உதயகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த தீர்ப்பாயம், இடமாற்றம் உத்தரவை ரத்து செய்ததுடன் இரண்டு வாரங்களுக்குள் அவரை மூணாறு ஊராட்சி செயலராக மீண்டும் நியமிக்குமாறு தீர்ப்பாய நீதிபதி அப்துல்ரஹீம் கடந்த மாதம் உத்தரவிட்டார். அதன்படி மூணாறு ஊராட்சி செயலராக உதயகுமார் மீண்டும் பொறுப்பேற்றார்.