/உள்ளூர் செய்திகள்/தேனி/ தாமரைக்குளம் கண்மாய் ரோடு சேதம்: விவசாயிகள் சிரமம் தாமரைக்குளம் கண்மாய் ரோடு சேதம்: விவசாயிகள் சிரமம்
தாமரைக்குளம் கண்மாய் ரோடு சேதம்: விவசாயிகள் சிரமம்
தாமரைக்குளம் கண்மாய் ரோடு சேதம்: விவசாயிகள் சிரமம்
தாமரைக்குளம் கண்மாய் ரோடு சேதம்: விவசாயிகள் சிரமம்
ADDED : ஜூன் 16, 2025 12:22 AM

பெரியகுளம்: பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் கண்மாய் பகுதியில்நுாற்றுக்கணக்கானஏக்கரில் நெல், கரும்புசாகுபடி நிலங்கள் உள்ளன.
இக்கண்மாய்கரையில் அமைக்கப்பட்டுஉள்ளஒன்றரை கி.மீ.,துார ரோட்டில் தாமரைக்குளம் பகுதி மக்கள் பங்களாபட்டி பிரிவிற்கு டூவீலர்,ஆட்டோக்களில் எளிதாக வந்து சென்றனர். விவசாயிகள் இடுபொருட்களை சிரமம் இன்றி கொண்டு சென்றனர்.தற்போது ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் டூவீலரில் சிறிது கவனம் சிதறினாலும் தடுமாறி குளத்திற்குள் விழும் அபாயம் உள்ளது. நீர்வளத்துறையினர் ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.