ADDED : செப் 20, 2025 11:56 PM
கடமலைக்குண்டு:கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவைச்சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் 48, பலசரக்கு கடை நடத்தினார். கடை மாடியில் உள்ள வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். வீட்டின் பின்புறம் உள்ள அவர்களது இடத்தில் போர்வெல் அமைத்து அந்த நீரை மின் மோட்டார் மூலம் மாடியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு குழாய் மூலம் கொண்டு செல்கின்றனர்.
நேற்று முன் தினம் மின் மோட்டாரை இயக்குவதற்காக சென்ற ஜெயபிரகாஷ் நீண்ட நேரமாக திரும்ப வரவில்லை. அவரது தம்பி பிரபாகரன் சென்று பார்த்த போது மின் மோட்டாரில் கசிந்த மின்சாரம் ஜெயபிரகாஷ் மீது பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.
சம்பவம் குறித்து ஜெயபிரகாஷ் மனைவி ராஜேஸ்வரி புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.