ADDED : செப் 23, 2025 04:45 AM
போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் மனித உரிமைகள் கழகம் சார்பில் மாணவர்களுக்கான மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி கவுரவ தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன், துணைத் தலைவர் ஞானவேல், முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர்கள் வனிதீஸ்வரி, தங்கத்துரை வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் சத்திய மூர்த்தி கலந்து கொண்டு மனித உரிமைகள், அதன் சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.