Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது

ADDED : ஜன 06, 2024 08:32 PM


Google News
Latest Tamil News
தேனி:தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் சுந்தரம், 52. இவர், தேனி பொதுப்பணி துறையில் டிரைவராக பணிபுரிகிறார். விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்த போது வத்திராயிருப்பு சுந்தர்ராஜ், 40, அறிமுகமானார்.

அவர், தனக்கு திருச்சியை சேர்ந்த சத்தார், 42, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் விஜயகுமார், 58, ஆகியோரை தெரியும் என்றும், இவர்கள் மூலம் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கி தருவதாகவும் கூறி உள்ளார்.

நம்பிய சுந்தரம் தன் உறவினர்கள், எட்டு பேருக்கு அரசு பணி வாங்கி தரக்கோரி தலா, 5 லட்சம் ரூபாய் வீதம், 40 லட்சத்தை மூவரிடமும் வழங்கினார்.

பணத்தை பெற்று கொண்டு, வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தனர்.

இதுகுறித்து, 2023 ஆகஸ்டில் தேனி மாவட்ட குற்றப்பிரிவில் சுந்தரம் புகார் செய்தார்.

மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், திருச்சியில் பதுங்கி இருந்த சத்தாரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us