/உள்ளூர் செய்திகள்/தேனி/ சட்டசபை தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு பயிற்சி சட்டசபை தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு பயிற்சி
சட்டசபை தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு பயிற்சி
சட்டசபை தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு பயிற்சி
சட்டசபை தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 01, 2024 05:19 AM
தேனி: லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடந்தது. அதற்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது. தேனி லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
ஓட்டுப்பதிவிற்குப்பின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சிகள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் வழங்கப்பட்டன.
மூன்றாம் கட்ட பயிற்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளில் மே 31, ஜூன் 1ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணும் பணிக்கு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்மேற்பார்வையாளர்கள் என 306 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த தொகுதியில் பணிபுரிய உள்ளனர் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.