ADDED : ஜூன் 01, 2024 05:16 AM
ஆண்டிபட்டி: -போடியைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி ஜெயராணி 36, இவர் தனது 17 வயது மகளுடன் ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டியில் உள்ள தனது தந்தை கருப்பசாமி வீட்டில் சில நாட்களாக தங்கி உள்ளார். மே 28 ல் இரவு வீட்டை விட்டு சென்ற தனது மகள் மீண்டும் திரும்பவில்லை.
இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான சிறுமி குறித்து விசாரிகின்றனர்.