Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

ADDED : ஜூலை 25, 2024 05:00 AM


Google News
பெரியகுளம்: கல்லூரி மாணவியை திருமணம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துபிரகாஷ் 31. இவர் உறவினர் மகள் 19 வயது மாணவி. மாணவி பள்ளியில் படிக்கும் போதிலிருந்து இருவரும் காதலித்துள்ளனர்.

தற்போது மாணவி வெளியூர் கல்லூரியில் படித்து வருகிறார். 2024 ஜன.20 ல் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பெரியகுளம் வந்த மாணவியை, முத்துபிரகாஷ் தனது வீட்டிற்கு வரவழைத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர், முத்து பிரகாஷ் தந்தை பாலு, தாய் ஈஸ்வரியிடம் நியாயம் கேட்டுள்ளனர். மாணவியின் பெற்றோரை அவதூறாக பேசி பாலு, ஈஸ்வரி தாக்கினர். பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, முத்துபிரகாஷ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, முத்துபிரகாஷை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us