ADDED : ஜூலை 14, 2024 04:05 AM
ஆண்டிபட்டி : ஆண்டிப்பட்டி அருகே சித்தையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சேதுராமன் மகன் விநாயகமூர்த்தி 40, கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து சென்றார். அவரது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் மனம் வெறுத்த விநாயகர் மூர்த்தி மதுபோதைக்கு அடிமையாகினார்.
இரு நாட்களுக்கு முன் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.