கொலை மிரட்டல்: 8 பேர் மீது வழக்கு
கொலை மிரட்டல்: 8 பேர் மீது வழக்கு
கொலை மிரட்டல்: 8 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 26, 2024 07:51 AM
தேனி: தேனி பவர் ஹவுஸ் தெரு ரமேஷ் 47. இவர் தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிகிறார்.
இவர் ஒண்டிவீரன் நகர் விஜயிடம் வேலை வாங்கி தருவதாக ரூ. 50 ஆயிரம் வாங்கினார். பணத்தை திருப்பி தராததால் உழவர் சந்தை அருகில் ரமேஷை விஜய், தமிழ், மணிபிரபு மேலும் 5 பேர் இணைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
ரமேஷ் புகாரில் 8 பேர் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.