ADDED : ஜூன் 22, 2024 05:43 AM
பெரியகுளம்: பெரியகுளத்தை பசுமை நகரமாக்க ஆலோசனை கூட்டம் புது பஸ்ஸ்டாண்ட் அருகே மண்டபத்தில் நடந்தது.
சரவணக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சுமிதா முன்னிலை வகித்தார்.
கமிஷனர் ராஜலட்சுமி, பொறியாளர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர் அசன் முகமது, நகரமைப்பு ஆய்வாளர் வீரணன் மற்றும் கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
நகர் பகுதியில் மரக்கன்றுகள் அதிகளவில் நடுவது, மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.