Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ துணை மின் நிலைய பவர் டிரான்ஸ்பார்மர் பிரேக்கர்கள் பராமரிக்க வலியுறுத்தல் உத்தமபாளையத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா

துணை மின் நிலைய பவர் டிரான்ஸ்பார்மர் பிரேக்கர்கள் பராமரிக்க வலியுறுத்தல் உத்தமபாளையத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா

துணை மின் நிலைய பவர் டிரான்ஸ்பார்மர் பிரேக்கர்கள் பராமரிக்க வலியுறுத்தல் உத்தமபாளையத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா

துணை மின் நிலைய பவர் டிரான்ஸ்பார்மர் பிரேக்கர்கள் பராமரிக்க வலியுறுத்தல் உத்தமபாளையத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா

ADDED : ஜூன் 19, 2024 04:57 AM


Google News
உத்தமபாளையம் : உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரி பராமரிப்பு செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் துணை மின் நிலையங்கள் உள்ளன.

தற்போதுள்ள துணை மின் நிலையங்களில் வண்ணத்தி பாறை, உத்தமபாளையம், ராசிங்காபுரம், காமாட்சிபுரம், மதுராபுரி, ஆண்டிபட்டி,

உள்ளிட்ட பல துணை மின் நிலையங்கள் மிகவும் பழமையானவை. மின் பாதையில் இருந்து மின்சாரம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வோல்ட்டாக துணை மின் நிலையத்தில் உள்ள பவர் டிரான்ஸ்பார்மருக்கு வரும். பவர் டிரான்ஸ்பார்மர் அதை 22 ஆயிரம் கிலோ வோல்ட்டாக மாற்றிநகரில் உள்ளடிரான்ஸ்பார்மர்களுக்கு அனுப்பும்.

டிரான்ஸ்பார்மர்களில் இருந்து வீடுகளுக்கு 230 வோல்ட்டாக குறைத்து வழங்கும்.

இதில் மாதந்தோறும் ஒரு நாள் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆனால் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேலோட்டமாகவே நடைபெறும். பழமையான துணை மின் நிலையங்களில் பிரேக்கர்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை. உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் உள்ள பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் துணை மின் நிலையத்தின் இதயமாக கருதப்படும் பேட்டரி அறையில் உள்ள 25 பேட்டரிகள் என்ன நிலையில் உள்ளது என்பதை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். அப்போது தான் நகரில் மின் சப்ளை தடங்கலின்றி இருக்கும்.

இது தொடர்பாக மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, தற்போது உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் பிரேக்கர்கள் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us