ADDED : ஜன 13, 2024 05:12 AM
காரைக்குடி, : அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் தேசிய இளைஞர் தின விழா நடந்தது.
யதிஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா மற்றும் ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமை வகித்தனர்.முதல்வர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார். அகில இந்திய சேவா இயக்க ஒருங்கிணைப்பாளர் குருபிரியானந்த சரஸ்வதி விவேகானந்தர் குறித்து பேசினார். கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இயக்குனர் மீனலோச்சனி நன்றி கூறினார்.