Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

ADDED : மே 21, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
காரைக்குடி : சாக்கோட்டை வட்டாரத்தில் நெற்பயிரில், மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சாக்கோட்டை வட்டாரத்தில் மானாவாரி மற்றும் போர்வெல் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் கோடை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உழவு உரம் விதைநெல் என ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து குண்டு ரகமான ஏ.எஸ்.டி. 16 ரக நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நெல் பரிய தொடங்கும் நிலையில், மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயி சுப்பையா கூறுகையில்: தற்போது கோடை விவசாயம் நடந்து வருகிறது. கடந்த பங்குனியில் நெல் விதைப்பில் ஈடுபட்டோம். விதை நெல் உரம் என ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us