/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விபத்தில் லாரி உரிமையாளர் பலி கொலை என மனைவி போலீசில் புகார் விபத்தில் லாரி உரிமையாளர் பலி கொலை என மனைவி போலீசில் புகார்
விபத்தில் லாரி உரிமையாளர் பலி கொலை என மனைவி போலீசில் புகார்
விபத்தில் லாரி உரிமையாளர் பலி கொலை என மனைவி போலீசில் புகார்
விபத்தில் லாரி உரிமையாளர் பலி கொலை என மனைவி போலீசில் புகார்
ADDED : செப் 04, 2025 04:29 AM
சிவகங்கை:ஊ சிவகங்கை அருகே மரத்தில் மோதி லாரி உரிமையாளர் பலியான நிலையில் தனது கணவரின் இறப்பு விபத்தாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், கணவரின் இறப்பை முழுமையாக விசாரிக்க கோரி மனைவி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி புதுநகர் தினகரன் மனைவி ரோஜா 26. இவரது கணவர் தினகரன் 36 டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார். ஆக.20 நள்ளிரவில் சிவகங்கை மாவட்டம் காயங்குளம் அருகே டூவீலரில் சென்ற போது மரத்தில் மோதிய நிலையில் இறந்து கிடந்தார். அப்பகுதியினர் மானாமதுரை சிப்காட் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆக.21 உறவினர்கள் தினகரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ரோந்து போலீசார் விரட்டியதால் தான் தினகரன் மரத்தில் மோதி இறந்ததாகவும் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் சிவராமன், டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனால் உறவினர்கள் தினகரன் உடலை வாங்கி சென்றனர்.
இந்நிலையில் நேற்று தினகரன் மனைவி ரோஜா தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் சிவகங்கை எஸ்.பி., அலுவலகம் வந்தார். தனது கணவர் தினகரன் இறப்பு குறித்து சிப்காட் போலீசார் சரிவர விசாரணை செய்யவில்லை. தனது கணவர் சென்ற டூவீலர் மோதியதாக கூறப்படும் மரத்தை சுற்றி தடயங்களை அழிக்கும் விதமாக தீ வைக்கப்பட்டுள்ளது. தனது கணவரை யாரோ படுகொலை செய்து விட்டு விபத்தாக சித்தரித்துள்ளனர் எனவும், தனது கணவரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.