ADDED : செப் 04, 2025 04:29 AM
மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் கீழப்பசலை தடுப்பணை பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் மற்றும் வீரர்கள் வெள்ள காலங்களில் தண்ணீரில் தத்தளிப்பவர்களை எப்படி காப்பாற்றுவது, முதலுதவி சிகிச்சை அளிப்பது உட்பட பல்வேறு பயிற்சிகளை செய்து காட்டினர்.