Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ந.வைரவன்பட்டியில் இன்று மகா பைரவ யாகம் நிறைவு

ந.வைரவன்பட்டியில் இன்று மகா பைரவ யாகம் நிறைவு

ந.வைரவன்பட்டியில் இன்று மகா பைரவ யாகம் நிறைவு

ந.வைரவன்பட்டியில் இன்று மகா பைரவ யாகம் நிறைவு

ADDED : ஜன 04, 2024 02:14 AM


Google News
திருப்புத்துார்; திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் இன்று பைரவ மகாயாகம் நிறைவு பெறுகிறது.

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மார்த்தாண்ட வயிரவசுவாமிக்கு பைரவர் மகாயாகம் நடைபெறுகிறது. ஜன. 2 அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 5:30 மணிக்கு நகரத்தார்களுக்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் சங்கல்பம் செய்து, இரவு 7:00 மணிக்கு முதற்காலயாக பூஜையை துவக்கி வைத்தார்.

நேற்று காலை 9:00 மணிக்கு 2ம் காலயாக பூஜை, மாலை 5:00 மணிக்கு 3ம் காலயாக பூஜை நடந்தது.தொடர்ந்து அஷ்ட பைரவ வடுக பூஜை, கன்யா பூஜை நடைபெற்று பூர்ணாஹூதி நடைபெற்றது.

இன்று, மூன்றாம் நாளான ஜன.4 காலை 9:00 மணிக்கு வெண்பட்டு ேஹாமம், வஸோதாரா ேஹாமம் நடந்து பூர்ணாஹூதிக்கு பின் மதியம் 12:30 மணிக்கு மூலஸ்தான பைரவருக்கு மகா அபிேஷகம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் பைரவருக்கு தீபாராதனை நடைபெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us