/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/துணை கலெக்டர் பதவி உயர்வு எப்போது தவிப்பில் சீனியர் தாசில்தார்கள்துணை கலெக்டர் பதவி உயர்வு எப்போது தவிப்பில் சீனியர் தாசில்தார்கள்
துணை கலெக்டர் பதவி உயர்வு எப்போது தவிப்பில் சீனியர் தாசில்தார்கள்
துணை கலெக்டர் பதவி உயர்வு எப்போது தவிப்பில் சீனியர் தாசில்தார்கள்
துணை கலெக்டர் பதவி உயர்வு எப்போது தவிப்பில் சீனியர் தாசில்தார்கள்
ADDED : ஜன 03, 2024 01:06 AM
சிவகங்கை:வருவாய்துறையில் ஆர்.டி.ஓ., துணை கலெக்டர் பதவிக்கான காலிப்பணியிடம் இருந்தும், தாசில்தார்களுக்கு துணை கலெக்டர் பதவி உயர்வு இழுபறியில் உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழக வருவாய்துறையில் ஒவ்வொரு ஆண்டும் தாசில்தார் நிலையில் பதவி உயர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு துணை கலெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும். இதன் மூலம் காலியாக உள்ள ஆர்.டி.ஓ., துணை கலெக்டர் நிலையிலான பதவிக்கு அதிகாரிகளை நியமித்து, வருவாய் பணி கண்காணிக்கப்படும். கடந்த 2022- - 2023 அக்டோபரில் சீனியர் தாசில்தார்கள் 78 பேருக்கு பதவி உயர்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் இன்றி 25 தாசில்தார்களுக்கு மட்டுமே துணை கலெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு பின் எஞ்சிய 52 சீனியர் தாசில்தார்களுக்கு அந்த பதவி உயர்வு வழங்கப்படாமல், வருவாய்துறை நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தமிழக வருவாய்துறையில் 70 க்கும் மேற்பட்ட துணை கலெக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, '2024 லோக்சபா தேர்தலுக்கு மாவட்டந்தோறும் துணை கலெக்டர் அந்தஸ்தில் கலெக்டர் (தேர்தல்) பி.ஏ.,க்களை நியமிக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பிற்கு முன் பட்டியலில் உள்ள தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது, என்றார்.