ADDED : ஜன 04, 2024 02:12 AM
சிவகங்கை; சிவகங்கை தேவஸ்தான அலுவலகத்தில் வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது. சிவகங்கை சமஸ்தான,தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். தேவஸ்தான மேலாளர் இளங்கோ வரவேற்றார்.
மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு, தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன், கோயில் கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், வேல்முருகன், தமிழ் சங்க தலைவர் கண்ணப்பன், கவுரவ தலைவர் ஜவஹர் கிருஷ்ணன், ரமணவிகாஷ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணா, நகை மதிப்பீட்டாளர் முத்துராஜா பங்கேற்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி ரத்த வங்கி அலுவலர்கள் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர்.