Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மு.சூரக்குடி கோயிலில் புரவி எடுப்பு

மு.சூரக்குடி கோயிலில் புரவி எடுப்பு

மு.சூரக்குடி கோயிலில் புரவி எடுப்பு

மு.சூரக்குடி கோயிலில் புரவி எடுப்பு

ADDED : ஜூன் 13, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி: மு.சூரக்குடி கிராமம் எஸ்.கோவில்பட்டி செகுட்டையனார் கோயில், சூரக்குடி சிறைமீட்ட ஐயனார் கோயில் புரவியெடுப்பு விழா நடந்தது.

விழாவையொட்டி 20 நாட்களுக்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டது. புரவிப் பொட்டலில் இருந்து ஜூன் 12ல் அனைத்து புரவிகளும் கச்சேரி திடலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

தொடர்ந்து பாரம்பரிய முறையில் சாமியாட்டம் நடந்தது.

நேற்று மாலை 5:00 மணிக்கு புரவி ஊர்வலம் நடந்தது. ஒரு அரண்மனை புரவி சிறைமீட்ட ஐயனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மற்றொரு அரண்மனை புரவியும், நேர்த்திக்கடன் புரவிகளும் செகுட்டையனார் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விழாவையொட்டி தங்கக் கவச அலங்காரத்தில் அய்யனார் அருள் பாலித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us