Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அம்மா உணவகம் குறித்து பொதுமக்கள் கவலை

அம்மா உணவகம் குறித்து பொதுமக்கள் கவலை

அம்மா உணவகம் குறித்து பொதுமக்கள் கவலை

அம்மா உணவகம் குறித்து பொதுமக்கள் கவலை

ADDED : ஜன 05, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
தமிழகத்தில் அம்மா உணவகமானது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏழை மக்களின் பசி போக்கும் இத்திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும், முன்னோடி திட்டமாக விளங்குகிறது. காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த 2015ம் ஆண்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

புது பஸ் ஸ்டாண்ட், கோர்ட், தாலுகா ஆபிஸ், போலீஸ் ஸ்டேஷன் என முக்கிய இடங்களுக்கு மத்தியில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. கூலித் தொழிலாளர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் வேலைக்குச் செல்லும் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்கும் வகையில் இருந்த அம்மா உணவகத்தின் நிலை தற்போது மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது.

காரைக்குடியில் அமைந்துள்ள அம்மா உணவகம் பராமரிப்பின்றி அழிந்து வருவதோடு, சுகாதார சீர்கேட்டில் சிக்கி வருகிறது. நுழைவு வாயிலில் உள்ள தரைதளம் சேதமடைந்து உணவகத்திற்கு வரும் மக்களின் கால்களை பதம் பார்க்கிறது. சுற்றிலும் முட்புதர் வளர்ந்து கிடக்கிறது. உணவு சாப்பிட்டு விட்டு கை கழுவும் இடம் பராமரிப்பில்லாததால் முகம் சுளிக்கும் வகையில், சுகாதாரமின்றி கிடக்கிறது.

இதுகுறித்து சுப்பையா கூறுகையில்:

வீடுகளை இழந்த மற்றும் ஏழை மக்கள், கூலி தொழிலாளர்கள் பசியை போக்கும் வீடாக அம்மா உணவகம் இருந்தது. மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டாலும் தரமானதாகவும் சுவையானதாகவும் இருந்தது.

தற்போது சாம்பார் மோசமாக உள்ளது. குறைந்த நேரத்திற்கு மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. தாமதமாக வந்தால் உணவு கிடைப்பதில்லை. கை கழுவும் இடம் பராமரிப்பின்றி கிடப்பதோடு, மிஞ்சிய உணவுகளை கொட்டுவதற்கு கூடை இல்லாமல், கீழே கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் அம்மா உணவகத்தை முறையாக பராமரித்து தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us