Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு

ADDED : மே 28, 2025 07:28 AM


Google News
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால் அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதியப்படும் என எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

18 வயது பூர்த்தியடையாத சிறார்களுக்கு அவர்களின் பெற்றோர் டூவீலர்களை கொடுப்பதால் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவதுடன் அவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதை தடுப்பதற்காக வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்த பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 2019 பிரிவு 199 ஏ படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், சிறுவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது வாகன உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்கள் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது. 12 மாதத்திற்கு வாகன பதிவு ரத்து செய்யப்படும். எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வாகனங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us