Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கொல்லங்குடியில் பங்குனி தேரோட்டம்

கொல்லங்குடியில் பங்குனி தேரோட்டம்

கொல்லங்குடியில் பங்குனி தேரோட்டம்

கொல்லங்குடியில் பங்குனி தேரோட்டம்

ADDED : மார் 18, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை: கொல்லங்குடி அருகேயுள்ள அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.

ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் மார்ச் 9 ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா துவங்கியது. அன்று மாலை அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் துவக்கினர்.

விழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மன் ரிஷபம், சிம்மம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.

9ம் நாளான நேற்று அதிகாலை 5:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், வெட்டுடையார் காளியம்மன் எழுந்தருளினார். நேற்று காலை 9:15 மணிக்கு கிராமத்தினர் கொடிகளை ஏந்தி நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து, தேர் வடத்தில் கட்டினர். பின்னர் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

தேர் புறப்படும் முன் சிதறு தேங்காய் உடைத்தனர். நேற்று காலை 9:33 மணிக்கு அனைத்து பக்தர்களும் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.

நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர்.

இன்று தீர்த்தவாரி உற்ஸவம்


10 ம் நாளான இன்று காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும்.

இன்று அதிகாலை 12:00 மணிக்கு பூப்பல்லக்கில் மின் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வருவார். ஹிந்து அறநிலைய செயல் அலுவலர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் கண்ணப்பன், உறுப்பினர்கள் சந்திரன், ராணி சீனிவாசன் ஆகியோர் ஏற்பாட்டை செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us