Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வடமாடு மஞ்சுவிரட்டு மாடு முட்டி 9 பேர் காயம்

வடமாடு மஞ்சுவிரட்டு மாடு முட்டி 9 பேர் காயம்

வடமாடு மஞ்சுவிரட்டு மாடு முட்டி 9 பேர் காயம்

வடமாடு மஞ்சுவிரட்டு மாடு முட்டி 9 பேர் காயம்

ADDED : மார் 18, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை: இடையமேலுார் அருகே கண்டாங்கிபட்டியில் தி.மு.க., சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 காளைகளும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 மாடுபிடி வீரர்கள் குழுவாக 135 வீரர்கள் பங்கேற்றனர்.

காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும். அடங்க மறுத்த காளைகளுக்கும் அடக்கிய வீரர்கள் குழுவிற்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாடு முட்டியதில் 4 பேர் காயமடைந்தனர்.

*சாலுாரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.

சிவகங்கை, சோழபுரம், நாலுகோட்டை, இடையமேலுார் உள்ளிட்ட பகுதியில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.

100க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டு மாடுகளாக பொட்டலில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டது.

50 மாடுகள் தொழுவத்தில் அவிழ்க்கப்பட்டது. மாடு முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us