ADDED : ஜூன் 06, 2025 02:39 AM
மானாமதுரை: மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு அருகில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.