Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விளாங்காட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் 

விளாங்காட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் 

விளாங்காட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் 

விளாங்காட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் 

ADDED : ஜூன் 06, 2025 02:39 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை: காளையார்கோவில் அருகே விளாங்காட்டூரில் நாட்டார் கால் ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை பொதுப்பணித்துறையினர் நேற்று அகற்றினர்.

காளையார்கோவில் ஒன்றியம் விளாங்காட்டூர் வழியாக பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள நாட்டார் கால் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரைகளை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியிருந்தனர். காலப்போக்கில் ஆற்றின் கரை முற்றிலும் சேதமானது.

இதையடுத்து நாட்டார் கால் ஆற்றின் கரையில் கட்டியுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். நேற்று பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தலைமையில் உதவி பொறியாளர்கள் அமுதசுரபி, முத்துராமலிங்கம் ஆகியோர் நாட்டார் கால் ஆற்றின் கரையில் கட்டியிருந்த வீடுகளை இயந்திரம் மூலம் அகற்றினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us