ADDED : பிப் 10, 2024 05:00 AM
காரைக்குடி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா போட்டி நடந்தது. இதில், இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் தர்ஷன் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மாநில அளவில் இப்பள்ளி முதலிடம் பிடித்துள்ளது. மாணவன் தர்ஷனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
இதில் மாங்குடி எம்.எல்.ஏ., மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், சாக்கோட்டை சேர்மன் சரண்யா, முன்னாள் சேர்மன் முத்துராமலிங்கம், ஊராட்சி தலைவர் வைரமுத்து அன்பரசு, பள்ளி தலைமைசிரியர் ஈஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.