Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஏழை மாணவர்களுக்கு 1 ரூபாய்க்கு முடி திருத்தம்

ஏழை மாணவர்களுக்கு 1 ரூபாய்க்கு முடி திருத்தம்

ஏழை மாணவர்களுக்கு 1 ரூபாய்க்கு முடி திருத்தம்

ஏழை மாணவர்களுக்கு 1 ரூபாய்க்கு முடி திருத்தம்

ADDED : ஜூன் 01, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி அருகே தல்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 32; தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே, 10 ஆண்டுகளாக ஜி.எம்., சலுான் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 'மாணவர்களுக்கு 1 ரூபாய்க்கு முடிதிருத்தம் செய்யப்படும்' என, நேற்று அறிவித்திருந்தார். இதையறிந்த மாணவர்கள் படையெடுத்தனர். மூர்த்தி கூறியதாவது:

வழக்கமாக சிறுவர்களுக்கு முடி வெட்ட, 80 ரூபாய் கட்டணம். பள்ளி திறக்கப்படும் நிலையில், ஏழை மாணவர்களுக்கு, 1 ரூபாய் மட்டும் பெற்று நேற்று முடிதிருத்தம் செய்தேன். மாலை வரை, 60க்கும் மேற்பட்டோர் முடிதிருத்தம் செய்து கொண்டனர். இந்தாண்டு தான் இம்முயற்சியை கையில் எடுத்தேன். இதுமட்டுமல்லாமல், தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us