ADDED : பிப் 05, 2024 11:48 PM

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட பா.ஜ.,வினர் தி.மு.க., அரசை கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பினரை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை நகர் அரண்மனை வாசலில் மாவட்ட பா.ஜ., சார்பில் தி.மு.க., அரசை கண்டித்தும் தேசிய கொடியை அவமதித்த மக்கள் அதிகார அமைப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார். நகர் தலைவர் உதயா முன்னிலை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் கவிதாசன், மாவட்ட துணை தலைவர்கள் சுகனேஸ்வரி, நாராயணன், ஏ.வி.நாகராஜன், முத்துராமலிங்கம், மாவட்ட பொது செயலாளர்கள் நாகராஜன், சங்கரசுப்பு, நடராஜன், லட்சுமி, மாநில செயலர் பாலமுருகன், விவசாய அணி பொது செயலாளர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், ஒ.பி.சி., அணி மாநில செயற்குழு உறுப்பினர்நாகேஸ்வரன் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த போதே பா.ஜ., வினர் சிலர் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.